search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
    X

    நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    நாமக்கல்லில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.

    இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

    இதில் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    எனவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் அடையலாம் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×