search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் காவல்துறை செயலி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
    X

    கோவையில் காவல்துறை செயலி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    • வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு.
    • ஆன்லைன் மோசடி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவை,

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், காவலர் செயலி, சைபர் குற்றங்கள், டெலிகிராம் போன்றவற்றால் ஏற்படும் அபாயங்கள், ஆன்லைன் மோசடி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், பள்ளி, கல்லூரி பகுதிகள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் மாநகர காவல்துறையின் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் தங்களுக்கு என பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாநகர காவல் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோகிணி, ஈஸ்வரன், பிரேமலதா மற்றும் தலைமைக் காவலர் ராஜ்பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×