என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடிநீர் பிரச்சினையை தீர்க்க செயல் அலுவலரிடம் மனு அளித்த பொதுமக்கள்
- ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒன்பது லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
- தண்ணீர் வரும் வழியில் வால்வு அமைத்து தண்ணீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி யில் கடந்த சில தினங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வரவேண்டிய நீரின்அளவு சரிவர வராத தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
பொது மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாள்தோறும் பேரூராட்சிக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் வந்த நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒன்பது லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
இதனால் பொதுமக்க ளுக்கு போதுமான தண்ணீர் வழங்க முடியவில்லை மேலும் குடிதண்ணீர் குழாயில் சட்டவிரோதமாக பொதுமக்கள் மோட்டார் வைத்தும் தண்ணீர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தலைஞாயிறு வலம்புரி சாலை, பள்ளி வாசல் தெரு, இடம்புரி ,சந்தைவெளி ஆகிய பகுதிகளில் குடிநீர்தண்ணீர் மிக குறைவாக வருவதாக கூறி முஸ்லிம் பெண்கள் ஏராளமானோர் பேரூரா ட்சிக்கு வந்து செயல் அலுவலர் குகனிடம் முறையிட்டனர்..உடனடியாக களப்ப ணியில் இறங்கி செயல் அலுவலர் குகன் வீடு வீடாக சென்று நேரடியாக பார்வையிட்டு குடிநீர் தண்ணீர் வரும் வழியில் வால்வு அமைத்துதண்ணீர் சீராக கிடைக்க நடவடி க்கை எடுப்பதாக பொது மக்களிடம் உறுதி அளித்தார். குடிதண்ணீர் கேட்டு வார்டு கவுன்சிலர்கள் அப்துல் அஜீஸ் ,மாதவன், கூட்டுறவு சங்க முன்னாள்இயக்குனர் வீரகுமார்,வழக்கறிஞர் ஹைதர்அலி,
ஜமாத் மன்ற உறுப்பினர் பக்ருதீன் உள்ளிடோர் பொதும க்களுடன் பேருரா ட்சி செயல் அலுவலரை சந்தித்தனர். பின்புமுன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், மாநில விவசாயிகள்கள் குழு உறுப்பினர் மகா குமார் உள்ளிட்டோர் பேருராட்சி செயல் அலுவலருடன் பேச்சுவார்த்தை நடத்திசட்ட விரோதமாக எடுத்துள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் .பொது மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இக்கோரிககையைஏற்று செயல் அலுவலர் குகன் பொதுமக்களிடம்
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட அறிவிப்பின்படி 13 ,14 , 15 ஆகிய மூன்று நாட்கள் குடிநீர் வழங்க இயலாது என்றும் அதன் பிறகு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு தட்டுபாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும்என்றும் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்