search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் விற்பனையாளர் விஷம் குடித்து தற்கொலை
    X

    டாஸ்மாக் விற்பனையாளர் விஷம் குடித்து தற்கொலை

    • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தவர் திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டிலும், உறவினர்களிடமும், தான் வேலை பார்க்கும் இடத்திலும் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் சங்கரன் மகன் நந்தகுமார். இவர் விராலிமலை அருகே உள்ள ஆவூர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.வீட்டிலும், உறவினர்களிடமும், தான் வேலை பார்க்கும் இடத்திலும் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.இதுபற்றி பெற்றோர் காரணம் கேட்டபோது, எதுவும் கூற மறுத்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுபானத்துடன் குருணை மருந்து என்று சொல்லக்கூடிய விஷ மருந்தை கலந்து குடித்து மயங்கியுள்ளார்.இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.அவரது உடலை கைப்பற்றிய விராலிமலை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×