search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கறம்பக்குடியில் தாமிர கம்பிகளை திருடிய 2 சிறுவர்கள் கைது
    X

    கறம்பக்குடியில் தாமிர கம்பிகளை திருடிய 2 சிறுவர்கள் கைது

    • கறம்பக்குடியில் தாமிர கம்பிகளை திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி வாணியத்தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 62). இவருக்கு சொந்தமான குடோனில் இருந்த தாமிர கம்பிகளை காணவில்லை. இது குறித்து அவர் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் தாமிர கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.



    Next Story
    ×