என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்20 April 2023 6:34 AM GMT
- கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்த நிலையில் இருந்தன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்பேரில் சிறப்பு காவல் படையினர் கறம்பக்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு என்ற கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற சுப்ரமணியன் (வயது 50), சதானந்தன் (48) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X