search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கறம்பக்குடியில் மது விற்ற 4 பேர் கைது
    X

    கறம்பக்குடியில் மது விற்ற 4 பேர் கைது

    • கறம்பக்குடியில் மது விற்ற 4 பேர் கைது செய்யபட்டார்
    • அவர்களிடமிருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்தது. அதன் பேரில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கறம்பக்குடி சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீனி கடை முக்கம், அம்பு கோவில் முக்கம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த கறம்பக்குடியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 37), கண்டியன் தெருவை சேர்ந்த அண்ணாதுரை (51), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (39), குழந்திரான் பட்டு கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் (52) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×