search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது
    X

    புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது

    • புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
    • சிறப்பு காவல் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    கே.புதுப்பட்டி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சிறப்பு காவல் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏம்பல் பகுதியில் உள்ள மதகம் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 44), இரும்பநாட்டை சேர்ந்த ஐயாசாமி (77), கொங்கன் தெருவை சேர்ந்த பாண்டியன் (47) ஆகியோர் தங்களது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதம் (44), மாங்காடு பூச்சிக்கடை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×