search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அறந்தாங்கி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 20 பவுன் சங்கிலி பறிப்பு
    X

    அறந்தாங்கி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 20 பவுன் சங்கிலி பறிப்பு

    • அறந்தாங்கி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 20 பவுன் சங்கிலி பறித்த 3 வாலிபர்கள் அதிரடி கைது
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கிடங்கிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆவுடையார் கோவிலில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளாதேவி (வயது 40). இவர்கள், குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது 3 மர்ம ஆசாமிகள் வீ்ட்டிற்குள் புகுந்து மஞ்சுளாதேவி கழுத்தில் கிடந்த 20 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.இதையடுத்து மஞ்சுளாதேவியின் சத்தத்தை கேட்டு கண்விழித்த ஆறுமுகம், மர்ம ஆசாமிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.அப்போது ஆறுமுகமும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் ஆகியோர் தப்பியோடிய மர்ம ஆசாமிகளை விரட்டி பிடித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மனோஜ்பட்டியை சேர்ந்த ரவி மகன் பிரபாகரன் (30), ராமசாமி மகன் ரமேஷ் (33), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரபாகரன் (25) என்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம ஆசாமிகளிடம் இருந்து 20 பவுன் தங்க சங்கிலியை போலீசார் கைப்பற்றினர்.

    Next Story
    ×