search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்கை பந்தயத்தில் சீறிபாய்ந்த ஜோடி மாடுகள்
    X

    எல்கை பந்தயத்தில் சீறிபாய்ந்த ஜோடி மாடுகள்

    • கோவில் திருவிழாவினை முன்னிட்டு எல்கை பந்தயம் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1.10 லட்சம் பரிசு, கோப்பை

    அறந்தாங்கி,

    அறந்தாங்கி தாலுகா கடையாத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரியநாயகி அம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 47 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 7 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. அவற்றை பார்வையிட்ட பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுதினர்.பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர்.30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை கடையாத்துப்பட்டி இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.




    Next Story
    ×