search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவிழாவிற்கு வந்த வாலிபர் சாலை விபத்தில் பலி
    X

    திருவிழாவிற்கு வந்த வாலிபர் சாலை விபத்தில் பலி

    • கந்தர்வகோட்டை அருகே நடந்த விபத்தில் வாலிபர் பலியானார்
    • காயம்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த மங்கனூர் கிராமத்தில் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவை காண்பதற்காக தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியை அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் அசோக் (வயது 23), மணி மகன் வெங்கடேஷ், மதியழகன் மகன் சூர்யா (12) ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்திருந்தனர்.பின்னர் அவர்கள் மங்கனூர் ஆலய திருவிழாவில் கலந்துகொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பும் போது கோமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வெங்கடேஷ், சூர்யா ஆகியோர் புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது தொடர்பாக கந்தர்வ கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×