search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடி வம்பனில் அமைதி பேரணி
    X

    ஆலங்குடி வம்பனில் அமைதி பேரணி

    பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுதிரி ஏந்தி அமைதியுடன் கலந்து கொண்டனர்.

    ஆலங்குடி:

    துருக்கி - சிரியாவின் ஏற்பட்ட பூகம்பத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி 35 ஆயிரத்திற்கும் அதிகமா னோர் பலியானார்கள். பூகம்பத்தில் பலியானர்க ளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆலங்குடி வம்பனில் உள்ள அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நல பணி திட்டம் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. முதல்வர் ஜான் மார்ட்டீன், துணை முதல்வர் மெட்டில்டா, திட்ட அலுவலர் முத்து மீனா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுதிரி ஏந்தி அமைதியுடன் கலந்து கொண்டனர். அமைதி பேரணியானது, பேரூந்து நிலையத்தில் துவங்கி பழைய நீதிமன்ற வளாகம், அரச மரம் பஸ் நிறுத்தம், வட காடு, முக்கம் வழியாக சந்தைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நிறைவடைந்தது. பேரணியில் துணை பேராசிரியர்கள் கமலா வைஜெயந்திமாலா, கலை ச்செல்வம் சத்தியமூர்த்தி, பிரவீன், அருள் அனுசியா புளோரா கிருஸ்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×