search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. எம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. எம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    • புதுக்கோட்டையில் பா.ஜ.க. எம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    மல்யுத்த வீராங்களைகள் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பா.ஜ.க. எம்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டையில் மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீராங்கணைகள் ஆகியோர் தங்கள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரன் சிங் மீது கடந்த ஜனவரி 18-ந் தேதி அன்று குற்றம் சாட்டினர். இந்தப் புகாரின் அடிப்படையில் டில்லி போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மல்யுத்த வீரங்கணைகள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கணைகள் மீதே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாஜக எம்பியை பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்யுத்த விராங்கணைகள் மீதான வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்திஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுசீலா தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் டி.சலோமி, எஸ்.பாண்டிச்செல்வி, எஸ்.சந்தோஷ்குமார், எம்.மகாலெட்சுமி, முத்துமாரி, டேவிட், தோழமைச் சங்க நிர்வாகிகள் ஆர்.சோலையப்பன், ஆர்.சுப்பிரமணியன், என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றன.

    Next Story
    ×