search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு வண்டி எல்கை பந்தயம்
    X

    மாட்டு வண்டி எல்கை பந்தயம்

    கூகனூரில் 51 ஜோடி மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி தாலுகா கூகனூர் கிராமத்தில் ஆண்டுதோறும்மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 51 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 8 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 22 ஜோடி மாடுகளும், ஆறு பல் மாடு பிரிவில் 21ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு உரிமையாளர்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் பணமும், கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.கூகனூர் கிராமத்தார்கள் விழாவிற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    Next Story
    ×