search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

    • தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் கட்டாயம் அணி–ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டது

    புதுக்கோட்டை :

    முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை, ஆணைப் பட்டி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஆணைப் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். தற்போது நிலவி வரும் கொரனோ நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைகளை அணுகி முறையான பரிசோதனை செய்து நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும், அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் கட்டாயம் அணியவும், போதுமான அளவு சமூக இடைவெளிவிடவும் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் சூர்யபிராகாஷ் அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். இம்முகாமில் ரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் நன்றி கூறினார்.


    Next Story
    ×