search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    • சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி தாலுகா வல்லவாரி கிராமத்தில் அமைந்து அருள்பாளித்து வரும் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 2 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம்காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான திரண்டிருந்த அப்பகுதியைச்சு ற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×