search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடி அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா
    X

    கறம்பக்குடி அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா

    • கறம்பக்குடி அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது
    • தேரை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    கறம்பக்குடி,

    கறம்பக்குடி அருகே உள்ள வடக்களூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நாளான கடைசி நாள் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்று தொடர்ந்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீ முத்துமாரியம்மன் காட்சி அளித்து பவனி வந்தார். தேரை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி கோவிலை வந்தடைந்தது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதான நிகழ்வு நடைபெற்றது. திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரகுநாதபுரம் மற்றும் கறம்பக்குடி போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×