search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
    X

    கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

    • கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது
    • குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார நிலையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் மழையூர் மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் இருந்து 120 கர்ப்பிணிகள் பங்கேற்றனா்.

    இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கலந்து கொண்டு சீர்வரிசை வழங்கி அதனுடன் சேர்த்து தனது சொந்த செலவில் புடவைகளை சீராக வழங்கி கர்ப்பிணி பெண்களை மகிழ்வித்தார். இந்த வளைகாப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு பெண் அலுவலர்கள் மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் கொடுத்து வளை யல் அணிவித்தனர்.

    இதில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது உடல்களை பரிசோதித்துக்கொள்ள மருத்து வமுகாம்களும் நடத்தப்பட்டது.‌ சமூக நலத்துறை சார்பில் கர்ப்ப காலங்களில் பெண்கள் உ ண்ணக்கூடிய உணவு வகைகள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும் கண்காட்சி வைத்து கர்ப்பிணிகளுக்கு விளக்கப்பட்டது.

    பின்னா் மருத்துவமனையை ஆய்வு செய்த எம்எல்ஏ முத்துராஜா நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் முகமது பஜ்ரூல்,சுகாதார மேற்பாா்வையாளா் துரை மாணிக்கம், கவுன்சிலா்கள் திருப்பதி, சுரேஷ் ஊாரட்சி மன்ற தலைவா்கள் கலைச்செல்வி தா்மராஜ், ரெத்தினம், சிவகாமி ராஜமாணிக்கம், திமுக பிரமுகா்கள் பாிமளம், சந்திர சேகா், கணேசன், மணி கண்டன் மற்றும் செவிலி யா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×