search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது கர்ப்பிணித்தாய் உயிரிழப்பு
    X

    அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது கர்ப்பிணித்தாய் உயிரிழப்பு

    • அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது கர்ப்பிணித்தாய் உயிரிழந்தார்
    • இரட்டை குழந்தை பிறந்தது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இராஜேந்திரபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 22). இவர் கடந்த 2019ம் ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் ஆனது முதல் இருவரும் விழுப்புரத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன் பின்னர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பிரசவத்திற்காக அவருக்கு, அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சையில் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

    ஆனால் தாய் ஐஸ்வர்யாவிற்கு, திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஐஸ்வர்யாவிற்கு சத்துக்குறை பாடு இருந்ததாலே, உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவை சிகிச்சையில் 2 பெண்குழந்தைகள் பிறந்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×