search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
    X

    கறம்பக்குடியில் விநாயகர் சிலைகள் கரைப்பு

    • கறம்பக்குடியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
    • அக்கினி ஆற்றுக்கு புறப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கறம்பக்குடி முழுவதும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ஒரே இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக அக்கினி ஆற்றுக்கு புறப்பட்டது.

    நிகழ்ச்சி தலைமை மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் காசிகண்ணன் வரவேற்று பேசினார். மாநில பா.ஜ.க. பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில விளையாட்டு திறன்மேம்பாட்டு பிரிவு செயலாளர் ந.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் கறம்பக்குடி பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் இருக்களவிடுதி பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் சேசு.மாரிமுத்து மற்றும் களக்கடிப்பட்டி சந்திரன், ஆனந்தராஜ், முருகையன், சின்னக்குழந்தை, ஆட்டோரவி அசோக்குமார், ஜெயபால், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×