என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திமுக பிரமுகர் உயிரிழப்பு
Byமாலை மலர்11 March 2023 7:06 AM GMT
- அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார்
- பொன்னமராவதி 4வது வார்டு செயலாளராக இருந்தவர்
பொன்னமராவதி,
புதுவளவு பகுதியை சார்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் மகன் கார்த்திகேயன்(49).செல்போன் பழுது நீக்கும் கடை வைத்திருப்பவர் இவர் பொன்னமராவதி 4வது வார்டு திமுக செயலாளராகவும் இருந்துவந்துள்ளார். நேற்று இரவு வலையபட்டி மலையாண்டி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். உடனடியாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கார்த்திகேயனுக்கு காயத்ரி என்ற மனைவியும், ஜீவா, சூர்யா என்ற மகன்களும் உள்ளனர். இச்சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் சுற்றுவட்டார அப்பகுதி மக்கள் மற்றும் திமுகவினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X