என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஏம்பல் கிராமத்தை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- ஏம்பல் கிராமத்தை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- புதிதாக உருவாக்கப்படும் அரிமளம் வட்டத்தில்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில் ஏம்பல், இரும்பாநாடு, குருங்களூர், மதகம் மற்றும் திருவாக்குடி ஆகிய ஊராட்சிகளைக் கொண்டு ஏம்பல் வருவாய் கிராமம் (பிர்க்கா) செயல்படுகிறது. இந்நிலையில் ஏம்பல், செங்கீரை, கீழாநிலை ஆகிய வருவாய் கிராமங்களை இணைத்து திருமயம் வட்டத்தில் உள்ள அரிமளத்தை தனி வட்டமாக உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு ஏம்பல் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு ெதரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ஏம்பல் வட்டார வளர்ச்சிக்குழுவினர் கூறியது: ஏம்பலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், ஏம்பல் வருவாய் கிராமத்தை இணைத்து அரிமளத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு உருவாக்கினால், ஏம்பல் பகுதி மக்கள் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு அலைய வேண்டி இருக்கும். எனவே, ஏம்பலை புதிய வட்டமாக உருவாக்க வேண்டும். இல்லையேல், ஏற்கனவே உள்ளபடி ஆவுடையார்கோவில் வட்டத்திலேயே தொடர்வது நல்லது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்