search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
    X

    கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

    • கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது
    • புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரியுமான சாமி சத்தியமூர்த்தி தனது சொந்த செலவில் மாணவர்களின் நலன் கருதி ரூ.1.05 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பள்ளிக்கு வழங்கினார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரும், புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரியுமான சாமி சத்தியமூர்த்தி தனது சொந்த செலவில் மாணவர்களின் நலன் கருதி ரூ.1.05 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பள்ளிக்கு வழங்கினார். விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு சுத்திகரிப்பு எந்திரத்தை இயக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேலு, நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பாளர் சீனிவாசன், தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×