search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோர மாலைநேர பூங்கா திறப்பு
    X

    சாலையோர மாலைநேர பூங்கா திறப்பு

    • புதுக்கோட்டையில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பு
    • எம்.எம்.அப்துல்லா எம்.பி. திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகில், டி.டி.பிளான்சாலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரின் திட்ட நிதியிலிருந்து ரூ.65 இலட்சம் மற்றும் மாவட்ட கலெக்டரி ன் சிறப்பு நிதி ரூ.24 இலட்சம் என மொத்தம் ரூ.89 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, சாலையோர மாலைநேர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறப்பு விழா மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை எம்பி, எம்.எம்.அப்துல்லா பூங்காவை திறந்து வைத்தார். இவ்விழாவில் புதுக்கோ ட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் (பொ) எஸ்.டி.பாலாஜி, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, காதர்கனி, ஜெயலட்சுமி, குமாரவேலு, க.லதா, பழனிவேல், சுகாதார ஆய்வாளர் மகாமுனி, வருவாய் ஆய்வாளர் விஜயஸ்ரீ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×