search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கார் மோதி விவசாயி பலி
    X

    கார் மோதி விவசாயி பலி

    • கார் மோதி விவசாயி பலியானார்.
    • இந்த விபத்து குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை

    செம்பட்டிவிடுதி அருகே உள்ள மணவிடுதி ஊராட்சி மாங்குடியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56), விவசாயி. இவர் கம்மங்காட்டில் இருந்து மாந்தங்குடிக்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த குளத்தூர் அண்டக்குளத்தை சேர்ந்த அப்துல்சலாம் ஓட்டிச்சென்ற கார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மூர்த்தி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூர்த்தியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூர்த்தி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




    Next Story
    ×