search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொன்னைபட்டியில் மீன்பிடி திருவிழா
    X

    கொன்னைபட்டியில் மீன்பிடி திருவிழா

    • கொன்னைபட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது
    • பொதுமக்கள் தண்ணீரில் உற்சாகத்துடன் இறங்கிய போது தண்ணீருக்குள் இருந்த மீன்கள் துள்ளி குதித்து தரையில் விழுந்தது

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைபட்டியில் மழை வளம் பெருகி, விவசாயம் செழிக்க வேண்டி, மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்து 15 வருடங்களாக மீன்பிடி திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு மீன் பிடி திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை கேட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு கொன்னைகம்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து கம்மாயில் குவிந்த பொதுமக்கள் கொன்னைபட்டி மடை கருப்பர் கோவிலில் வழிபாடு நடத்தி சாமி கும்பிட்டனர்.

    அதன் பின்னர் மீன்பிடித் திருவிழாவை முக்கியஸ்தர்கள் தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தண்ணீரில் துள்ளி குதித்தோடி மீன் பிடித்தனர். பொதுமக்கள் தண்ணீரில் உற்சாகத்துடன் இறங்கிய போது தண்ணீருக்குள் இருந்த மீன்கள் துள்ளி குதித்து தரையில் விழுந்தது. இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தரையில் துள்ளிய மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். கம்மாய் தண்ணீரில் இருந்து நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, சிசி ,போட்ல,ரோகு,விரால் உள்ளிட்ட மீன்களை ஒரு கிலோ முதல் 20 கிலோ வரை எடை கொண்ட மீன்களை பிடித்து மகிழ்ச்சியில் உற்சாகமடைந்தனர்.

    இந்த மீன் பிடி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்தவர்கள் இது பற்றி கூறும்போது.... வழக்கமாக மீன் பிடி திருவிழாவில் சில பேருக்கு மீன்கள் கிடைக்காது. ஆனால் இந்த வருடம் அப்படி இல்லாமல் அனைவரும் மீன் கிடைத்துள்ளது, எல்லா தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்று கூறினர்.

    Next Story
    ×