search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
    X

    திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

    • திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது
    • நகரெங்கும் அன்னதானம், தண்ணீர் பந்தல்கள் மற்றும் பல்வேறு இசை ஒளிகள் காணப்பட்டது.

    புதுக்கோட்டை,:

    புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயில் பிற கோயில்களுக்கு சிகரம் வைத்தாற் போல திகழும் இக்கோவிலில் அம்மன் எழில்மிகு கோலத்தில் வீற்றிருக்கிறாள். சிறப்புமிக்க இக்கோவிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசியாக நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடையில் பால்குடம் ஏந்தியும் கோயிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    நகரெங்கும் அன்னதானம், தண்ணீர் பந்தல்கள் மற்றும் பல்வேறு இசை ஒளிகள் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு முழுவதும் புதுக்கோட்டை மாலையீடு, ராஜகோபாலபுரம், டி.வி.எஸ்.கார்னர், சாந்தநாதபுரம் நான்காம் வீதி, பூங்காநகர், மச்சுவாடி, காமராஜபுரம், பிருந்தாவனம், வடக்கு 2ம் வீதி, நெய்கொட்டான்மரம், சமுத்துவபுரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், மின் அலங்கார ஊர்திகளில் வைக்கப்பட்ட அம்மன் உருவச்சிலையுடன் பூத்தட்டு ஏந்தி கோயிலுக்குச் சென்று பூக்களை காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர். அதே வேளையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    Next Story
    ×