search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பூச்செரிதல் விழா
    X

    பூச்செரிதல் விழா

    • கொன்னையூர் முத்து மாரியம்மன்கேயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்செரிதல் விழா நடைபெற்றது
    • பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    பொன்னமராவதி

    பொன்னமராவதி அருகே உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா தொடங்கியது. விழாவின் துவக்கமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் பால்குடம்,பூத்தட்டு எடுத்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி வெகு விமர்சையாக நடைபெறும். இன்றிலிருந்து திருவிழா கலைகட்ட தொடங்கியது. விழாவின் துவக்கமாக பூச்சொரிதல் விழா இதனை முன்னிட்டு பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும்பால்குடம் பூத்தட்டு போன்றவற்றை தங்களது பகுதியில் இருந்து எடுத்துச் சென்று அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருக்கும் பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இவ்விழாவையும் ஒட்டி கோவிலை சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் பாதுகாப்பு பணிகளும் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.கோவில்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் வந்து செல்லும் வண்ணம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணியிடமிருந்தும் காரைக்குடி போக்குவரத்து பணிமனையில் இருந்தும் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு அதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்ற வன்னமாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை கோவிலின் முன்பாக அக்னி காவடி நடைபெற உள்ளது.




    Next Story
    ×