search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் இலவச வீட்டுமனை பட்டா
    X

    புதுக்கோட்டையில் இலவச வீட்டுமனை பட்டா

    • புதுக்கோட்டையில் 9 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 9 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பயனாளிகளுக்கு வழங்கினார்.விராலிமலை வட்டம், அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த 9 நபர்களுக்கு தலா 50 சதுர மீட்டர் பரப்பளவுடைய இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு வீடுகட்டும் திட்டத்தின்கீழ், முன்னுரிமை அடி ப்படையில் அவர்களுக்கு வீடுகள் கட்டி க்கொடுக்கவும், பெட்டிக்கடை அமைத்திடவும், மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் மு.பி.ம.சத்தியசீலன், வட்டாட்சி யர் சதீஸ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×