என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
இலவச கண் சிகிச்சை முகாம்
- விராலிமலை செக்போஸ்டில் முகாம் நடைபெற்றது
- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்டில் சிவிபி அறக்கட்டளை மற்றும் ஜோசப் ஆரஞ்ச் கண் பரிசோதனை மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இந்த முகாமை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது சிவிபி அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.இதில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு கண்புரை, சக்கரைநோய், மற்றும் கண்நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சை அளித்தனர்.இதில் கலந்துகொண்ட கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கண் குறைபாடுகள் உள்ள பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முதல் மருந்துகள் வரை முழுவதுமே இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய செயலாளர் நாகராஜ், விராலிமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபன் சக்ரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன்,கல்குடி அய்யப்பன், ஆவின் ராஜா, ஐடி விங்க் அப்பு மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்