search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச தையல் பயிற்சி நிறைவு விழா
    X

    இலவச தையல் பயிற்சி நிறைவு விழா

    • கறம்பக்குடி திருமணஞ்சேரி ஊராட்சியில் இலவச தையல் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது
    • ஏழை பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் திருமணஞ்சேரி ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள் மற்றும் ஏழை மாணவிகளுக்கு நடத்தப்படும் அரசு இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவினை மாரிமுத்து மாசிலாமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை வகித்தார். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் மாவட்ட தாட்கோ மேலாளர் முத்துரத்தினம் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக நீதிபதி செல்வகுமார் கலந்துகொண்டு பயிற்சி முடித்த ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் மிஷின்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் கரம்பக்குடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான தவ.பாஞ்சாலன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆர் எம் ஓ இந்திராணி திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×