என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பணியின் போது அரசு பேருந்து ஓட்டுநர் சாவு
- பணியின் போது அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்
- மாரடைப்பு ஏற்பட்டதும் பேருந்தை நிறுத்தியுள்ளார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பணியின் ே பாது ஏற்பட்ட மாரடைப்பால் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம், உலகம்பட்டி அருகே உள்ள படமிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் குமார் (வயது40). இவர் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்றுகாலை 8 மணியளவில் சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தை சுமார் 70 பயணிகளுடன் குமார் ஓட்டிவந்தார். மேலச்சிவபுரி அருகே வந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தை நிறுத்திய குமார் பேருந்திலேயே மயங்கி விழுந்தார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் அங்கு வந்து வலையப்பட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனர். அவங்கு அவரை பரிசோதிதத் மருத்துவர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முன்னதாக உயிரிழந்த ஓட்டுநர் குமார், பேருந்தை உடனடியாக நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்