search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவிகளுக்கான விடுதி
    X

    கல்லூரி மாணவிகளுக்கான விடுதி

    • கல்லூரி மாணவிகளுக்கான விடுதி பயன்பாட்டிற்கு வந்தது
    • காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கல்லூரி மாணவிகள் விடுதி பாபு ஜெகஜீவன்ராம் சத்ரவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 50 கல்லூரி மாணவிகள் தங்கும் வகையில் 5 தங்கும் அறைகளும், காப்பாளினி அறை, சமையலறை, உணவுக் கூடம், கழிவறை உள்ளிட்டவைகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதேபோல முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு நிதியுதவியுடன் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தப்படி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். மருதன்கோன்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், கல்லூரி முதல்வர் சந்திரவதனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் காணொலியில் திறந்து வைத்த புதிய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

    Next Story
    ×