search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு மனை பட்டா ேகாரி மனு
    X

    வீட்டு மனை பட்டா ேகாரி மனு

    • இரும்பாநாடு பட்டியல் இன மக்கள் கலெக்டரிடம் அளித்தனர்
    • விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாநாடு பட்டியல் இன மக்கள், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வீரையா ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் , நாங்கள் ஆவுடையார்கோவில் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பாநாடு கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 1987-ஆம் ஆண்டு இந்திராகாந்தி கூட்டுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 20 காலனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த வீட்டிற்கான வீட்டுவரி, மின் கட்டணங்களை தொடர்ந்து செலுத்தி வருகிறோம். இந்த வீட்டு முகவரியில்தான் எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பெற்றுள்ளோம்.நாங்கள் வசிக்கும் காலனி வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 2004-ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கொடுத்து வலியுறுத்தி வருகிறோம். இதுநாள் வரை எங்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை.இந்நிலையில் நாங்கள் குடியிருக்கும் வீட்டுமனைக்கான இடம் தற்பொழுது வேறொரு தனிநபரின் பெயரில் பட்டா ஏற்பட்டுள்ளது. மேற்படி வேறொரு தனிநபரின் பட்டாவை உடனடியாக ரத்து செய்வதோடு 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களின் பெயரில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    Next Story
    ×