search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வெங்கடேஸ்வரா பள்ளியில்  பிஐஎஸ் கிளை தொடக்க விழா
    X

    வெங்கடேஸ்வரா பள்ளியில் பிஐஎஸ் கிளை தொடக்க விழா

    • வெங்கடேஸ்வரா பள்ளியில் பிஐஎஸ் கிளை தொடக்க விழா நடைபெற்றது
    • புதுக்கோட்டை திருக்கோகர்ணம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் மதுரை இந்திய தர நிர்ணய அமைவனமும் இணைந்து நடத்திய புதுக்கோட்டை பிஐஎஸ் தர நிர்ணய சங்கத்தின் கிளை துவக்க விழா நடைபெற்றது.

    பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி விழாவினை தலைமையேற்க மாணவர்கள் நர்மதா, ஹரினிபிரியா, சுந்தர், முகமது சாஃபிக் மற்றும் ஆசிரியர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

    இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மதுரை கிளை மேலாளர்கள் சிவகுமார் மற்றும் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இந்திய தர நிர்யணத்தின் செயல்பாடுகள் மற்றும் நுகர்வோர் மேம்பாட்டிற்கான ஒரு கருவி "பிஐஎஸ் கேர் ஆப்" ஆகியவை பற்றி விளக்கி கூறினர்.

    அப்போது அவர்கள் பேசும்போது "பொதுவாக கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்கும்போது அந்தப் பொருள் தரமானதாக உள்ளதா என்பதை சரிபார் த்து வாங்கவேண்டும். சந்தையில் ஏராளமான தரமற்ற பொருட்கள் விற்கப்படும் நிலையில் வாங்கும் பொருளில் இந்திய தர நிர்யண முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்கவேண்டியது அவசியம் என்று கூறினர். மேலும் பொருள்களின் தர நிர்ணயம் பற்றிய மாணவர்களுக்கான வினாடிவினா போட்டியினை நடத்தி ரொக்கப்பரிசு வழங்கினாரகள். பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பிஐஎஸ் கிளப்பின் மாணவர் தலைவர்களாக நர்மதா, ஹரினிபிரியா, சுந்தர், முகமது சாஃபிக் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்த அமைப்பின் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி பள்ளியின் முதல்வர் பேசும்போது, மாணவர் கள், பெற்றோர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பொருள்கள் வாங்கும்போது தரமான ஐஎஸ்ஐ முத்திரை உள்ள பொருட்களை வாங்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த விழாவில் துணைமுதல்வர் குமாரவேல், ஆசிரியர;கள் கமல்ராஜ், துர் காதேவி, அபிராமசுந்தரி, ராஜா, உதயகுமார் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து க்கொண்டனர்.

    Next Story
    ×