search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிகட்டு ஆர்வலர்களால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் 5-ந்தேதி பாராட்டு விழா
    X

    ஜல்லிகட்டு ஆர்வலர்களால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் 5-ந்தேதி பாராட்டு விழா

    • ஜல்லிகட்டு ஆர்வலர்களால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் 5-ந்தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது
    • இதற்காக அரசு மருத்துவகல்லூரியிலிருந்து திருச்சி சாலை சிப்காட் செல்லும் வழியில் பந்தல் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

    புதுக்கோட்டை,

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்று தந்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிகட்டு ஆர்வலர்களால் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டையில் வருகிற 5-ந்தேதி பாராட்டு விழா நடைப்பெறுகிறது.இதற்காக அரசு மருத்துவகல்லூரியிலிருந்து திருச்சி சாலை சிப்காட் செல்லும் வழியில் பந்தல் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

    இதையொட்டி இன்று மாலை கற்பக விநாயகர் மகாலில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கலந்துக் கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மேலும் ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் உட்பட ஜல்லிகட்டு பேரவையினர், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

    Next Story
    ×