search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலுப்பூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி
    X

    இலுப்பூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி

    • இலுப்பூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக இந்த போட்டியினை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர். சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த போட்டியில் 850 காளைகளும், 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு கொண்டுள்ளனர்.திருச்சி, மதுரை, அரியலுர், தேனி, பெரம்பலூர், மணப்பாறை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 850 காளைகள் கலந்து பங்கேற்றுள்ளது. காளைகளுக்கும், காளையர்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் சார்பில் அண்டா, சைக்கிள், தங்க நாணயம், உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.அது மட்டுமல்லாமல் விழா குழு சார்பில் கட்டில், பேன், ஹாட்பாக்ஸ் , டைனிங் டேபிள், கிப்ட் பேக் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து பார்த்து ரசித்தனர்.

    Next Story
    ×