search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொன்னமராவதியில் கரகம் எடுப்பு விழா
    X

    பொன்னமராவதியில் கரகம் எடுப்பு விழா

    • சௌடாம்பிகை அம்மன் கோயிலில் நடைபெற்றது
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை

    பொன்னமராவதி,

    பொன்னமராவதி உள்ள சௌடாம்பிகை அம்மன் கோயிலில் கரகம் எடுப்பு பொங்கல் அபிஷேக ஆராதனை சக்திவேல் அழைத்து வணங்கும் விழா தேவாங்கர் மகா ஜன சபையின் சார்பாக நடைபெற்றது. பொன்னமராவதியில் உள்ள இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோயிலில் கரகமஹோத்சவ விழாவை முன்னிட்டு பொன்னமராவதி சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று சௌடாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் மகா அபிஷேக, ஆராதனை, அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் மலையாண்டி கோவிலில் இருந்து கரகம் எடுத்தல், ரதி சேர்த்தல் என்னும் கத்தி போடும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதில் ஏராளமானோர் விரதம் இருந்து பங்குனி திருவிழாவில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்வர். அதனைத் தொடர்ந்து நாளை மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமும் எடுத்துச் சென்று சாமியை வழிபாடு செய்யப்படும்.

    Next Story
    ×