என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பொன்னமராவதியில் கலை இலக்கிய போட்டிகள்
- பொன்னமராவதியில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தக திருவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பொன்னமராவதியில் கலை இலக்கியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழா வரும் 29-ந் தேதி முதல் ஆகஸ்ட் 7-ந் தேதி வரை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற உள்ளது.
அதன்ஒரு பகுதியாக பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில், பொன்னமராவதி வட்டார அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கியப்போட்டிகள் நடபெற்றது. மூன்று பிரிவுகளாக பேச்சுப் போட்டி, கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம், தமிழநாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநிலப் பொருளாளர் பிரபாகரன், மாநில செயலர் பாலகிருஷ்ணன், வட்டாரவள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு, தலைமையாசிரியர் தமிழ்செல்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க பொன்னமராவதி ஒன்றியத் த லைவர் அறிவுடைநம்பி, செயலர் ராசு, சுற்றுவட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்