search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ந.புதூரில் புதிய ரேஷன் கடை
    X

    ந.புதூரில் புதிய ரேஷன் கடை

    • அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்
    • ந.புதூரில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ந.புதூர் நியாயவிலைக் கடையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.பின்னர் அவர் பேசும் போது,தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான இடங்களில் புதிய நியாயவிலை கடைகள் திறந்து வைப்பதன் மூலம் வீண் அலைச்சலை தவிர்ப்பதுடன் தரமான உணவு பொருட்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது திருமயம் அருகே கோட்டூர் ரேஷன் கடையில் இருந்து 519, ரேஷன் கார்டுகளை பிரித்து, ந.புதூரில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம்ரூபவ் அறந்தாங்கி சரக துணைப்பதிவாளர் ஆறுமுக பெருமாள், துணை பதிவாளர் (பொ.வி.தி) கோபால்ரூபவ் லெம்பலக்குடி, ஊராட்சிமன்றத் தலைவர் பாலு, அறங்காவலர் குழு உறுப்பினர் துரைராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×