search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    டாஸ்மாக் பாரில் சலூன் கடை ஊழியர் மர்மச்சாவு
    X

    டாஸ்மாக் பாரில் சலூன் கடை ஊழியர் மர்மச்சாவு

    • டாஸ்மாக் பாரில் சலூன் கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
    • கொலையா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள கொத்தகம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சத்திய செல்வன் (வயது 35). சலூன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை கந்தர்வகோட்டை தஞ்சை சாலையில் உள்ள அரசு மதுபானக்கடைக்கு அருகிலுள்ள பாரில் சமையல் செய்யும் கூடத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இன்று காலை பாரில் வேலை செய்யும் ஊழியர் பணிக்கு வந்தபோது சத்தியசீலன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுபற்றி அவர் உடனடியாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த கந்தர்வகோட்டை போலீசார் பிணமாக கிடந்த சத்திய செல்வன் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அளவுக்கு அதிகமான மது போதையில் தவறி குப்புற விழுந்ததில் அவர் இறந்தாரா அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இறந்த சத்திய செல்வனுக்கு தேவி என்ற மனைவியும், கோபிகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். இந்த சம்பவம் கந்தர்வகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×