search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கொடிகள் வழங்கும் விழா
    X

    தேசிய கொடிகள் வழங்கும் விழா

    • தேசிய கொடிகள் வழங்கும் விழா நடைபெற்றது
    • 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தில் தேசிய கொடிகள் வழங்கும் விழா மற்றும் பேரணி நடைப்பெற்றது.

    வருகின்ற ஆகஸ்ட் 15 -ந் தேதி 75-வது சுதந்திர தின விழா நடைப்பெற உள்ளது.இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியின் சார்பில், நடுநிலை பள்ளி முன்பு தேசிய கொடி வழங்கும் விழா மற்றும் பேரணி நடைப்பெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி தலைமை வகித்தார்.ஒன்றியக்குழு தலைவர் சுதாஅடைக்கலமணி பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் கொடியேற்றுவதற்கு தேசிய கொடி வழங்கி பேரணியை தொடங்கி வைத்தார். கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் 75- வது சுதந்திர தின விழா பற்றியும் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும் முறை குறித்து பேசினார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் அழகப்பன் சரோஜாதேவி தலைமை ஆசிரியர் சுபத்ரா ஊராட்சி செயலாளர் அழகப்பன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×