search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி தொடக்கம்
    X

    வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி தொடக்கம்

    • வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி தொடங்கியது.
    • அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான வாலிபால் போட்டியை மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன் னிட்டு தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வா லிபால் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    ஆண்கள் பிரிவில் கேரளா காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், செ ன்னை ஜிஎஸ்டி, பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கேஎஸ்இபி அணி, கேரளா காவ ல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஐசிஎப் ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன.

    போட்டியை மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:

    தமிழ்நாடு வாலிபால் கழகமானது 3 ஆண்டுகள் முடக்கி வைக்கப்பட் டு இருந்தது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் அ ந்த கழகத்தினரிடம் பேசி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆ ணையத்தின் அனுமதியையும் பெற்று தனித்துவமாக செயல்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.விளையாட்டு துறையில் அனைத்து பிரிவுகளிலும் தமி ழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் சாதித்து வருகின்றனர்.

    இந்திய ஹாக்கி அணியில்கூட தமிழகத்தைச்சேர்ந்த 2 வீரர்கள், ஆசிய அளவில் பதக்கம் பெறுவதற்கான பங்களிப்பை செய்திருக்கிறா ர்கள். சென்னையில் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவானது உலகமே வியக்கும் வ கையில் நடைபெற உள்ளது.

    இதற்காக 52 ஆயிரம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் உள் விளையா ட்டு அரங்கம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.சென்னையில் ரூ.700 கோடியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி விரைவில் உருவாக்கப்பட உள்ளது.

    இதேபோன்று தமிழகத்தில் தொகுதிக்கு ரூ.3 கோடியில் சர்வதே தரத்தில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்,

    வாலிபால் போட்டியை கான அப்பகுதியைசேர்ந்த சுமார் 3000 ஆ யிரத்திற்கும் அதிகமானோர் தொடக்க விழாவில் கலந்து கொண்ட னர் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் அழகம்மை(பொ)தலமையிலான போ லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×