search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    2500க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு
    X

    2500க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு

    • புதுக்கோட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது
    • 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கலைஞர்கருணாநிதி அரசு மகளிர்கலைக் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தின. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்எஸ்.ரகுபதி வழங்கினார்.இந்நிகழ்வு மாவட்ட கலெக்டர்கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.பின்னர்சட்டத்துறை அமைச்சர்தெர ிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 3-வது முறையாக நடைபெற்று வரும் இந்த தனியா ர்துறை வேலை வாய்ப்பு முகாமில் உற்பத்தி த்துறை, சேவைத்துறை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான பணியா ளர்களை தேர்தெடுத்தனர். இம்முகாம் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார்2500-க்கும் மேற்பட்ட வேலைநாடுனர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.என்று அவர் பேசினார்.இம்முகாமில், அயல்நா ட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.இந்நிகழ்வில், மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) இர.தேவேந்திரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர்திலகவதி செந்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன் (தொ.வ.), பெ.வேல்முருகன், கல்லூரி முதல்வர்பா.புவனேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்எஸ்.உலகநாதன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×