search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்கு, வெறிநாய்கடியால் பொதுமக்கள் அவதி
    X

    குரங்கு, வெறிநாய்கடியால் பொதுமக்கள் அவதி

    • கலெக்டரிடம், கவுன்சிலர் புகார் மனு
    • 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதாக புகார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களுர் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகராணிசின்னையா கடந்த 6ம் தேதி நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் தங்கள் பகுதியில் வெறி நாய் தொல்லையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும், வெறி நாய் கடித்து 15க்கும் மேற்ப ட்டோர் காயமடைந்து உள்ள தாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் வெறிநாயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மீண்டும் அவர் மனு அளித்துள்ளார். அதில் வெறிநாயோடு தற்போது குரங்கு தொல்லையும் அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×