என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பா.ம.க. 35-வது ஆண்டு தொடக்க விழா
- கந்தர்வகோட்டையில் பா.ம.க. 35-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது
- கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஒன்றிய நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பேருந்து நிலையம், காந்தி சிலை ஆகிய இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு தொண்டர்களுக்கும், ,பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் வளாகத்தில் பா.ம.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பிட வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் மது விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், கந்தர்வகோட்டை மருத்துவமனையை விரிவுபடுத்தி கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலாளர் கருப்பையா, நகரச் செயலாளர் சுரேஷ், கார்த்திக் ,திருப்பதி ,சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்