search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் மீது போக்சோ வழக்கு
    X

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் மீது போக்சோ வழக்கு

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டாக்டர் கொடுக்கும் மருத்துவ அறிக்கைக்கு பின் மாரிமுத்துவை கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்

    புதுக்கோட்டை:

    கீரனூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 70). இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மாரிமுத்துக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர் கொடுக்கும் மருத்துவ அறிக்கைக்கு பின் மாரிமுத்துவை கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.



    Next Story
    ×