என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறந்த பட்டு புழு வளர்போருக்கு ரூ.3.22 லட்சம் பரிசு
- புதுக்கோட்டை மாவட்ட பட்டுபுழு வளர்பவர்களுக்கு தளவாடங்கள் வழங்கப்பட்டது
- மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் நடைபெற்ற இக்கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டது.மேலும், பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்டி முடிக்கப்பட்டு பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ளும் 7 பட்டு புழு வளர்ப்போருக்கு தலா ரூ.37,500 வீதம் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களையும், மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000மும், இரண்டாம் பரிசாக ரூ.20,000மும், மூன்றாவது பரிசாக ரூ.15,000மும் மொத்தம் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், பட்டு வளர்ச்சி ஆய்வாளர் வெள்ளையம்மாள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்