search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
    X

    பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • மக்கள் குறைதீர் கூட்டத்திடில் 323 மனுக்கள் பெறப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவி த்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 323 மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மாற்று த்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், விபத்து மரணத்திற்கான நிதியுதவித் தொகையாக ரூ.1,00,000 ஒரு பயனாளிக்கும் மற்றும் இயற்கை மரணம் நிதியுதவித் தொகையாக தலா ரூ.17,000 வீதம் 20 பயனாளிகளுக்கு ரூ.3,40,000 -க்கான காசோலைகளையும், ரூ.7,500 மதிப்பிலான உதவி உபகரணங்கள் 2 பயனாளிகளுக்கும் என ஆகமொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.4,47,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×