search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பள்ளி விழா
    X

    பள்ளி விழா

    • பொன்னமராவதி அமல அன்னை பள்ளியில் நடைபெற்றது
    • 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

    பொன்னமராவதி,

    பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு அருள்சகோதரி லீமா ரோஸ் தலைமைவகித்தார். பள்ளியின் முதல்வர் ச.ம.மரியபுஷ்பம் வரவேற்றார். விழாவில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்க்கு தொழிலதிபர் ஏ.பி.மணிகண்டன், மருத்துவர் ஆ.அழகேசன், ஊராட்சி மன்றத்தலைவர் தொட்டியம்பட்டி கீதா சோலையப்பன், கண்டியாநத்தம் செல்வி முருகேசன், கொப்பனாபட்டி மேனகா மகேஸ்வரன், வர்த்தகர் கழகத்தலைவர் எஸ்கேஎஸ்.பழனியப்பன் ஆகியோர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். ஒலியமங்கலம் பங்குத்தந்தை ஏஎம்.லூர்துசாமி, புனித ஆரோக்கிய அன்னை ஆலய செயலர் யு.சிரில் ஞானராஜ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துணை முதல்வர் ஆர்.பிரின்ஸ் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.ஆசிரியர்கள் செ.பாலமுரளி, ஜெ.வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆசிரியை ரிபினா நன்றி கூறினார்.

    Next Story
    ×