என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பள்ளி விழா
- பொன்னமராவதி அமல அன்னை பள்ளியில் நடைபெற்றது
- 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
பொன்னமராவதி,
பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு அருள்சகோதரி லீமா ரோஸ் தலைமைவகித்தார். பள்ளியின் முதல்வர் ச.ம.மரியபுஷ்பம் வரவேற்றார். விழாவில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்க்கு தொழிலதிபர் ஏ.பி.மணிகண்டன், மருத்துவர் ஆ.அழகேசன், ஊராட்சி மன்றத்தலைவர் தொட்டியம்பட்டி கீதா சோலையப்பன், கண்டியாநத்தம் செல்வி முருகேசன், கொப்பனாபட்டி மேனகா மகேஸ்வரன், வர்த்தகர் கழகத்தலைவர் எஸ்கேஎஸ்.பழனியப்பன் ஆகியோர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். ஒலியமங்கலம் பங்குத்தந்தை ஏஎம்.லூர்துசாமி, புனித ஆரோக்கிய அன்னை ஆலய செயலர் யு.சிரில் ஞானராஜ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துணை முதல்வர் ஆர்.பிரின்ஸ் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.ஆசிரியர்கள் செ.பாலமுரளி, ஜெ.வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆசிரியை ரிபினா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்